கிளிநொச்சி - பரந்தன், சிவபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கணவனும் மனைவியும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று (ஏப்-01) பிற்பகல் இடம்பெற்றுள்ள குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த வீட்டில் கணவனும் மனைவியும் வசித்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே குடும்பத்தகராறு இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் தானும் தூக்கிட்டு தொங்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது.
இது தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த இரண்டு பேரின் சடலங்களும் தற்போது வீட்டினுள்ளேயே காணப்படுகின்றன.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், கிளிநொச்சி